கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே திட்டுவிளை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த ஆண்டு அதே பகுதியில் உள்ள பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது தன்னுடன் படித்த 18 வயதான வினிஷ் ஜோஸ் என்ற மாணவனை காதலித்தார். இதை அறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியை உயர் கல்விக்கு அனுப்பாமல், அப்பகுதியில் உள்ள சிறுவயது மாணவர்களுக்கு வீட்டிலேயே டியூஷன் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தனர். ஆனால், சிறுமி ரகசியமாக வினிஷ் ஜோசுடனான காதலை வளர்த்து வந்ததோடு, செல்போனிலும் பேசி வந்துள்ளார். தற்போது, வினிஷ் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 11-ம் தேதி வினிஷின் நண்பர்களான சிஜுன், ஜெரி ஆகியோர் உதவியுடன் காதல் ஜோடி மாயமானது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் போலீசிடம் அளித்த புகாரை தொடர்ந்து, நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார், காதல் ஜோடியை கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சிறுமியை அழைத்து சென்று பெங்களூருவில் தங்கியிருந்த நிலையில், அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செயததாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து வினிஷ் ஜோசை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். தற்போது சிறுமி காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment