மாவட்ட திராவிடர்கழக அலுவலகமான நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் வைத்து திராவிடர் கழக குமரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
திராவிடர்கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்து உரையாற்றினார். திராவிடர் கழக தொழிலாளரணி மாநில செயலாளர் திருச்சி எம். சேகர், திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் மதுரை வே.செல்வம் ஆகியோர் கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து சிறப்புரையாற்றினர்.
பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பெரியார்தாஸ் . மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ், திராவிடர்கழக தோழர்கள் உசிலம்பட்டி சிவா, மு.குமரிச்செல்வர், முத்துவைரவன், கன்னியாகுமரி கிளைக் கழக அமைப்பாளர் க.யுவான்ஸ் , மாநகர துணைத் தலைவர் கவிஞர் ஹ.செய்க்முகமது பங்கேற்றனர். கழக இலக்கிய அணி செயலாளர் பா. பொன்னு ராசன் நன்றி கூறினார் . கழகத் தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். மறைவுற்ற கழகத் தோழர் நாகர்கோவில் சு.இராஜகோபால் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாருடைய கருத்துக்களை உலகிற்கு கொண்டுசேர்க்கும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுடைய பிறந்த நாளை டிசம்பர் 2 அன்று குமரி மாவட்டத்தில் எழுச்சியுடன் கொண்டாடுவது எனவும், கழக தலைமைச் செயற்குழு கூட்டத் தீர்மானங்களை குமரிமாவட்டத்தில் செயல்படுத்துவது எனவும், குமரிமாவட்ட திராவிடர் கழகம் சார்பாக விடுதலை நாளிதழுக்கு அதிகமான சந்தாக்களை சேர்ப்பது எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment