வாகனத்தினை பின்தொடர்ந்து துரத்தியபோது ஓட்டுநர் சிறிது தூரத்தில் வாகனத்தினை சாலையில் நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். பின்னர் சொகுசு கார் சோதனை செய்ததில் சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. தொடர்ந்து பயணிகள் ஆட்டோவினை அழகிய மண்டபம் அருகே நிறுத்தி சோதனை செய்த போது ஓட்டுநர் தப்பி ஓடினார்.
பின்னர் அதிலிருந்த சுமார் 500 கிலோ ரேஷன் அரிசி ஆட்டோவுடன் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து தக்கலை தபால் நிலையம் அருகே ரோந்து பணியில் இருந்த போது நூதன முறையில் வாழைக் குலைகளுக்கு அடியில் மறைத்து வைத்து சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி ஏற்றி வந்த மினி டெம்போ அரிசியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில் 3 வாகனங்களிலும் கொண்டு வந்த ரேஷன் அரிசி கேரளா மாநிலத்திற்கு கடத்துவதற்கு கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி உடையார் விளை அரசு கிட்டங்கியில் இன்று ஒப்படைக்கப்பட்டது.

No comments:
Post a Comment