காவலர்கள் வீரவணக்க நாள் அனுசரிப்பு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 21 October 2022

காவலர்கள் வீரவணக்க நாள் அனுசரிப்பு.

வீரமரணமடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்திய  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் 1959-ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன  ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி  காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.


இன்று கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  D.N. ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள், காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் அவர்கள்,  சைபர் கிரைம் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் அவர்கள்,  துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும்  காவல் ஆளினர்கள் மலர் வளையம் வைத்து 21 குண்டுகள் முழங்க இன்னுயிர் நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள். 



No comments:

Post a Comment