9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வழிப்பறி திருடர்கள் சிக்கினர். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 10 October 2022

9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வழிப்பறி திருடர்கள் சிக்கினர்.

அஞ்சுகிராமம், தென்தாமரைகுளம், சுசீந்திரம், கன்னியாகுமரி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 2013-ம் ஆண்டு வழிப்பறிகள் நடந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது இந்த வழிப்பறி வழக்குகளில்  நெல்லை மாவட்டம் ஆவரைகுளத்தைச் சேர்ந்த ரவி என்ற ரவிக்குமார் (வயது 38) ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர். இதை அறிந்ததும் ரவிக்குமார் தலை மறைவானார்.


இந்த நிலையில் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய் லெட்சுமி, அஞ்சுகிராமம் சப்-இன்ஸ் பெக்டர் ஜெசிமேனகா, தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ்வரராஜ் ஆகியோர் ரவிக்குமாரை தேடும்பணியில் ஈடுபட்டனர். 


இந்த நிலையில் 9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ரவிக்குமாரை காவல்கிணறு அருகே கைது செய்தனர். அவரது கூட்டாளியான குமரி மாவட்டம் மேட்டுக் குடியிருப்பை சேர்ந்த ராஜாவும் (29 ) கைது செய்யப்பட்டார். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 18 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர். 

No comments:

Post a Comment