சோதனைச்சாவடிகள் மற்றும் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 13 October 2022

சோதனைச்சாவடிகள் மற்றும் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

கன்னியாகுமரி  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஹரி கிரன் பிரசாத்  மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் சோதனைசாவடிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.


இன்று கொல்லங்கோடு காவல் நிலையத்திற்கு சென்ற அவர் காவல் நிலையத்தை சுற்றி பார்வையிட்டு, காவல் அதிகாரிகள், ஆளினர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்பு காவல்துறையினர் காவல் நிலையங்களை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்றும், காவல்துறை கோப்புகளை சரியான முறையில் கையாள வேண்டும் என்று அறிவுரை கூறினார்.


மேலும் அவர் கோழிவிளை மற்றும் சூழால் சோதனைசாவடிகளை ஆய்வு செய்து, காவலர்களிடம் பொது மக்களிடம்  பேசும் போது மரியாதையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும், அவர்களிடம் கண்ணியமாகவும், பொறுமையாகவும், மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும், வாகன தணிக்கை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும்,  காவலர்கள் தங்கள் உடல் நலனில் கவனம் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

No comments:

Post a Comment