இப்படி அடமானமாக வைக்கப்படும் நகைகளை கவனமாக பாதுகாக்க வேண்டுவது வங்கி நிர்வாகத்தின் கடமை ஆகும் அத்துடன் அந்த நகைகளுக்கு முழு காப்பீடு செய்திட வேண்டும் சில வருடங்களுக்கு முன்னர் கன்னியாகுமரி மாவட்டம் அழகன்பாறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொதுமக்களால் அடமானம் வைக்கப்பட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது மீட்கப்பட்ட நகைகளும் பொதுமக்களுக்கு இதுவரை பகிர்ந்து அளிக்கப்பட வில்லை இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாயினர் நகைகள் திரும்ப கிடைக்க இதற்கான முக்கிய காரணம் அதிகாரிகள் தங்கள் பணிகளில் மெத்தனமாக இருந்தது எல்லா நகைகளையும் காப்பீடு செய்யாததும் ஆகும் அனைத்து நகைகளும் முறையாக காப்பீடு செய்யப்பட்டிருந்தால் பல ஆண்டுகளுக்கு முன்னரே பொதுமக்கள் தங்கள் நகைகள் நகைகள் ஆகவோ அல்லது பணமாகவோ திரும்ப கிடைக்கும் பல வங்கிகள் காப்பீடு செய்ய ஆகும் பணத்தினை லாபம் ஆக்கிக் கொள்வதற்காக சரியான காப்பீடு செய்வதில்லை ஆகவே அனைத்து வங்கிகளிலும் விவசாயிகளால் அடமானம் வைக்கப்படும் நகைகள் காப்பீடு செய்து உள்ளதா என்பதை உறுதி செய்து விடுமாறு கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் வழக்கறிஞர் ஜாண் சௌந்தர் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, விவசாயிகள் தங்கள் தேவைகளுக்காக கூட்டுறவு மற்றும் பிற வங்கிகளில் தங்க நகைகளை அடமானமாக வைத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பயன்படுத்தி விவசாயம் மற்றும் தங்கள் பிள்ளைகளின் படிப்பு சார்ந்த அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி வருகின்றனர்.
No comments:
Post a Comment