கன்னியாகுமரி, திருவட்டார், குமரன்குடி கிராம நிர்வாக அலுவலர் ஜெகன் அருள் வேர்க்கிளம்பி கரியமங்கலத்துவிளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த டெம்போவை நிறுத்தி சோதனையிட்ட போது செம்மண் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதற்கிடையே டிரைவர் இறங்கி தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் டெம்போவை பறிமுதல் செய்து திருவட்டார் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்க பெருமாள் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய டெம்போ டிரைவரை தேடி வருகிறார்.

No comments:
Post a Comment