கோவை உக்கடம் பகுதியில் கார் ஒன்று வெடித்து சிதறியதில் காரை ஓட்டி வந்த ஜமேசா முபீன் என்பவர் இறந்துள்ளார். அந்த காரின் சிலிண்டர் வெடித்து முபீன் இறந்திருக்கலாம் என்று காவல்துறை தெரிவிக்கின்றது.
முபீனின் வீட்டிலும் வெடி பொருட்கள் கிடைத்துள்ளதால் இது இயல்பான விபத்தல்ல என்றும் இது குறித்து முழுமையான விசாரணை நடந்திய பிறகே முழுத் தகவலும் சொல்ல முடியும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த விசாரணையையும் முடுக்கி விட்டுள்ளது.

காவல்துறை எந்த அழுத்தத்திற்கும் ஆளாகாமல் உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். அமைதிப் பூங்கா தமிழகத்தில் வன்முறையில் ஈடுபட்டு, சட்ட ஒழுங்கை சீர் குலைக்கும் வகையில் செயல்படுவோர் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் நிலவும் மத நல்லிணக்கத்திற்கும், சமூக ஒற்றுமைக்கும் கேடு விளைவிக்கும் தீய சக்திகளை பாகுபாடின்றி மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
உண்மை குற்றவாளிகள் யாராக இருப்பினும் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர் ஆர்.அப்துல்கரீம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment