போதை பொருட்களுக்கு எதிராக தமிழக-கேரளா போலீசார் இணைந்து விழிப்புணர்வு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 7 October 2022

போதை பொருட்களுக்கு எதிராக தமிழக-கேரளா போலீசார் இணைந்து விழிப்புணர்வு.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் புது முயற்சி போதை பொருட்களுக்கு எதிராக தமிழக-கேரளா போலீசார் இணைந்து விழிப்புணர்வு.


கன்னியாகுமரி மாவட்டம், தமிழக-கேரளா எல்லையான களியக்காவிளை, ஊரம்பு மற்றும் கொல்லங்ககோடு பகுதிகளில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N. ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் மற்றும் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் ஷில்பா IPS ஆகியோர் தமிழக-கேரளா  எல்லையான களியக்காவிளை, ஊரம்பு மற்றும் கொல்லங்ககோடு பகுதிகளில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.


குமரி-கேரளா எல்லையில் அமைந்துள்ள மருந்தகங்களில் ஆய்வு மேற்கொண்டு போதை மாத்திரைகள் ஏதேனும் விற்பனை செய்யப்படுகிறதா எனவும், மருத்துவரின் அனுமதி சீட்டு இல்லாமல்  தூக்கமாத்திரை வாங்க யாரேனும் வந்தால் வழங்க கூடாது எனவும் அறிவுரை கூறினர்.


மேலும் பலசரக்கு கடைகளில் போதைப்பொருட்கள் எதுவும் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டு, அவர்களுக்கு போதை பொருட்களை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்யக்கூடாது என்றும் அறிவுரை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


பின்பு அந்த பகுதிகளில் ஓடும் குமரி-கேரளா ஆட்டோ ஓட்டிகளிடம் குமரி மாவட்ட காவல்துறை சார்பாக கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள்  தடுப்பிற்காக  ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 7010363173 என்ற எண்ணை ஆட்டோ ஓட்டுநர்களிடம் அளித்து கஞ்சா மற்றும் போதை பொருட்கள் பற்றி தகவல் அறிந்தால் உடனடியாக மேற்கண்ட எண்ணிற்கு காலை 07 மணி முதல் மாலை 06 மணி வரை தகவல் அளிக்கலாம் எனவும் விபரம் அளிப்பவர்களின்  பற்றிய  தகவல் எக்காரணத்தை கொண்டு வெளியிடபடமாட்டாது என கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.


அந்த பகுதிகளில் அமைந்துள்ள கொரியர் பார்சல் சர்வீஸ் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு 5 கிலோ மற்றும் அதற்கு குறைவான அளவில் பார்சல்   வந்தால் அதற்கு உரியவரிடம் ஒப்படைத்து அதனை பிரித்து பார்க்க வேண்டும் எனவும், சந்தேக நபர்கள் என தென்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் எனவும், அனைத்து பார்சல் சர்வீஸ் கடைகளிலும் கண்டிப்பாக சிசிடிவி செயல்பாட்டில் இருக்க வேண்டும் என கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தமிழக-கேரளா போலீசார் இணைந்து போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தியதை அப்பகுதி மக்கள் இரு மாநில காவல்துறைக்கும் தங்கள் பாராட்டுதலை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment