மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி என்ற பெயரில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. காந்தி ஜெயந்தியை பாரதீய ஜனதா கட்சியினரும் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பொதுமக்கள் காதி தயாரிப்புகள் வாங்க வேண்டும் எனவும் பாரத பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன் அடிப்படையில் காதி தயாரிப்பு பொருட்களை ஊக்குவிக்கும் வகையில், பா.ஜ.க. மாவட்ட பொருளாளரும் மாநகராட்சி தெற்கு மண்டல தலைவருமான முத்துராமன் தலைமையில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகில் உள்ள காதி அங்காடியில், காதி துணிகளை வாங்கி பாஜக கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
இதில் மாநில மகளிர் அணி செயலாளர் மீனாதேவ், மாநில மகளிர் அணி தலைவி உமா ரெஜிராஜன், மாவட்ட துணைத் தலைவர் தேவ், 24-வது வார்டு கவுன்சிலர்கள் ரோசிட்டாதிருமால், 12 வந்து வார்டு கவுன்சிலர் சுனில் அரசு மற்றும் திரளான பா.ஜ.கவினர் கதர் துணிகள் மற்றும் காதி தயாரிப்புகளை வாங்கினார்கள் காந்தி ஜெயந்தியை சிறப்பாக கொண்டாடினர்.
No comments:
Post a Comment