பல்வேறு ஆன்லைன் மோசடிகளில் இழந்த ரூ.31,0000 லட்சம் - பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த குமரி சைபர் கிரைம் போலீசார். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 15 November 2022

பல்வேறு ஆன்லைன் மோசடிகளில் இழந்த ரூ.31,0000 லட்சம் - பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த குமரி சைபர் கிரைம் போலீசார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆன்லைனில் Job Offers, ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்தால் பொருட்கள் மற்றும் பணத்தை திரும்ப கொடுக்காமல் மோசடி செய்தல், Credit Card activate செய்ய லிங்கை பயன்படுத்தி மோசடி, Gpay, PhonePe போன்ற UPI பண பரிவர்த்தனைகளில் எண் மாற்றி போடும் பணத்தை திரும்ப தராமல் மோசடி, போன்ற ஆன்லைன் சைபர் கிரைம் குற்றங்களில் பாதிக்கப்பட்டு 41 பேர் தங்கள் பணத்தை இழந்தனர். இதில் சம்பந்தபட்ட நபர்கள் மாவட்ட காவல் கண்கணிப்பாளர்  ஹரி கிரன் பிரசாத் IPS அவர்களிடம் புகார் அளித்தனர். 

இந்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்த குற்ற சம்பவங்கள் குறித்த விசாரணை மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்று வந்தது. இப்புகார்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்த கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, ரூ.31,69,843/- பணத்தை மீட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் இன்று 15.11.2022 மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து பணத்தை இழந்த நபர்களிடம் பணத்தை ஒப்படைத்தார்கள். 


மேலும் விரைந்து செயல்பட்டு இழந்த பணத்தை மீட்டு கொடுத்த சைபர் கிரைம் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக  பாராட்டினார்.

No comments:

Post a Comment