பால் விலை, மற்றும் மின் கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மீனாட்சிபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாநகர தலைவர் ராஜன் தலைமை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் முத்துராமன், பிரசார பிரிவு துணை தலைவர் இசக்கி முத்துபிள்ளை, ஆன்மிக பிரிவு தலைவர் அனுசியா செல்வி, மண்டல பொதுச்செயலாளர் ராஜேஷ் குமார், கவுன்சிலர் ரோசிட்டாள், மாநகர பார்வையாளர் அஜித்குமார், சந்திரசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment