கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கான தேர்தல் முடிந்து புதிய நிர்வாகம் அமைந்ததும் சீரமைப்பு என்ற பெயரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த அனைத்து நடவடிக்கைகளும் மக்களுக்கு எதிராகவே அமைந்து இருப்பதால் மாநகராட்சி நிர்வாகம் மக்கள் விரோத நிர்வாகமாக மாறி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இதனிடையே மாநகராட்சி நிர்வாகத்தின் தொலைநோக்கு பார்வை இல்லாத நடவடிக்கைகளால் மாநகர பகுதி கடும் போக்குவரத்து நெருக்கடியால் திணறி வருகிறது. குறிப்பாக சாலை விரிவாக்கம் மற்றும் புதிய சாலைகள் அமைக்கப்படாமலும், 10 ஆண்டுகளை கடந்தும் பாதாள சாக்கடை பணிகளை முடிக்காமல் குறுகிய சாலைகளில் சென்டர் மீடியன் கற்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் விபத்துகள் அதிகம் ஏற்படுவதோடு பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும், அலுவலகங்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்லும் பொதுமக்களும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
இதனிடையே முதலில் சாலைகள் அமைக்கப்பட்டு அதன் பின்னர் சென்டர் மீடியன் கற்கள் அமைக்கப்படாமல், தலைகீழாக செயல்படும் மாநகராட்சி மக்களின் நலனில் அக்கறை காட்டி, தன் நிலையை மாற்றி கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment