நாகர்கோவில் மாநகராட்சி புதிய கட்டிடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க வரவுள்ளார் - மாநகராட்சி மேயர் மகேஷ் . - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 29 November 2022

நாகர்கோவில் மாநகராட்சி புதிய கட்டிடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க வரவுள்ளார் - மாநகராட்சி மேயர் மகேஷ் .


நாகர்கோவில் மாநகராட்சி கூட்டம் மேயர் மகேஷ் தலைமையில் இன்று நடைபெற்றது. பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது கூறியதாவது மாநகராட்சி புதிய அலுவலக கட்டிட பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் புதிய கட்டிடத்தை திறந்து வைக்க வருகை தர உள்ளார். 

புதிய கட்டிடத்தில் மாநகராட்சி அலுவலகம் செயல்படும் போது ஆளூர், தெங்கம்புதூர் தற்பொழுது செயல்படும் மாநகராட்சி அலுவலகத்தில் மண்டல அலுவலகங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். வரி விதிப்பில் குளறு படிகள் இருந்தால் அதை சரி செய்ய உடனடி நட வடிக்கை எடுக்கப்படும். புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 


காண்ட்ராக்டரிடம் போதிய நிதி இல்லாததால் இந்த பணிகள் மெதுவாக நடைபெற்று வருகிறது. தினமும் 300 பணியாளர்கள் பணி யில் ஈடுபட்டால் 2 மாத காலத்திற்குள் அந்த பணியை முடிக்க முடியும். அந்த குடிநீர் திட்ட பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.


மாநகர பகுதியில் சாலை சீரமைப்பிற்கு ரூ. 30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிதி 52 வார்டு கவுன்சிலர்களுக்கும் பாரபட்சமின்றி சமமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ரூ.10 கோடி நிதி மண் ரோடு சீரமைக்க ஒதுக்கி உள்ளோம் என்று மேயர் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

No comments:

Post a Comment