மகப்பேறு மருத்துவ சிகிச்சைக்கு சென்ற பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுப்பு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 30 November 2022

மகப்பேறு மருத்துவ சிகிச்சைக்கு சென்ற பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு சிகிச்சைக்காக சென்ற முத்துலட்சுமி க/பெ ராஜேஷ், என்ற கர்ப்பிணி பெண்ணை இங்கு நாங்கள் மகப்பேறு சிகிச்சை அளிக்க மாட்டோம் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தான் மகப்பேறு சிகிச்சைக்கு செல்ல வேண்டும் என்று அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மற்றும் பணியில் இருந்த செவிலியர்கள் முத்துலட்சுமியிடம் கூறவே அதிர்ச்சியடைந்த அவர் நான் இதுவரையில் அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் சிகிச்சை பெற்று உள்ளேன் தற்போது மகப்பேறு சிகிச்சையும் எனக்கு இங்கு தான் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

அதற்கு அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மற்றும் ஊழியர்கள் வலுக்கட்டாயமாக நீங்கள் ஆசாரிப்பள்த்திற்கு தான் செல்ல வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கர்ப்பிணி பெண் முத்துலட்சுமி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் உடனடியாக மருத்துவ உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்ட போது அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்கள் பணியில் இல்லாததும் மகப்பேறு சிகிச்சைக்காக வருகிறவர்களை சிகிச்சை கொடுக்காமல் அலைக்கழித்ததும் தெரியவந்தது. 



இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவரும் சுகாதார பணிகள் துணை இயக்குனரும் உறுதியளித்துள்ளனர். ஏழை எளிய மக்கள்தான் சிகிச்சை பெற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனைக்கு வருகை தருகிறார்கள் அவர்களுக்கு உரிய சிகிச்சையை கொடுப்பதோடு பணியில் மருத்துவர் மட்டும் செவிலியர்கள் இருப்பதை உறுதி செய்து அனைத்து நோயாளிகளுக்கும் உரிய சிகிச்சை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் குமரி மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம். 

No comments:

Post a Comment