காதலன் கொலை விவகாரம் -தனியார் விடுதிகளிலும் விசாரணை நடத்த முடிவு - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 6 November 2022

காதலன் கொலை விவகாரம் -தனியார் விடுதிகளிலும் விசாரணை நடத்த முடிவு

குமரி - கேரள எல்லை பகுதியான பாறசாலையில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து சாரோன் ராஜ் என்ற வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியான காதலி கிரீஷ்மாவை, கேரள குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். 


இந்த விசாரணையின் போது பலமுறையாக குளிர்பானத்திலும், கஷாயத்திலும் விஷம் கலந்து கொடுத்ததாக கிரீஷ்மா போலீசாரின் விசாரணையில் ஒப்புக்கொண்டார் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரள குற்றப்பிரிவு போலீசார் கிரீஷ்மாவுடன் அவரது வீட்டிற்கு வந்து நேரடியாக ஆய்வும் நடத்தி வருகின்றனர். 


காதலன் வீட்டுக்கு வந்து சென்றது குறித்ததும் கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்தது குறித்தும் நடித்து காட்டியபடி நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் கொலைக்கு பயன்படுத்திய பல தடயங்களை கைபற்றியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இருவரும் ஒன்றாக சுற்றித்திரிந்த பகுதிகளிலும் நேரடியாக சென்று விசாரணை நடத்த இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 


அதுபோல நேற்று முந்தினம் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட கிரீஷ்மாவின் வீட்டின் பூட்டை உடைத்து புகுந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்த தமிழக காவல்துறைக்கு கேரளா போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த விசாரணை போது கிரீஷ்மா-வின் மாமா நிர்மல்குமாரும் உடன் அழைத்து வரப்பட்டிருந்தார். அவரிடமும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. 


இந்நிலையில் கிரீஷ்மா தனது காதலனுடன் திற்பரப்பு மற்றும் சிற்றாறு போன்ற பல்வேறு விடுதிகளில் சுற்றித்திரிந்து தங்கியதாக கூறப்படுகிறது. அந்த விடுதிகளிலும் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். 

No comments:

Post a Comment