குமரி போலீசாரின் தொடர் நடவடிக்கை, பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடிய வாலிபர் கைது, நான்கு இருசக்கர வாகனங்கள் மீட்பு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 21 November 2022

குமரி போலீசாரின் தொடர் நடவடிக்கை, பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடிய வாலிபர் கைது, நான்கு இருசக்கர வாகனங்கள் மீட்பு.

கன்னியாகுமரி மாவட்டம்,  பூதப்பாண்டி  பகுதியை சேர்ந்தவர் ரெகு ராஜேஷ் . இவர் தனது மோட்டார் சைக்கிளை கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் வீட்டின் முன் நிறுத்தி விட்டு சென்ற போது பைக் திருடுப்போனது. மேலும் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய எல்கைகுட்பட்ட பகுதிகளிலும் இதேபோல் மோட்டார் சைக்கிள் திருட்டு நடைபெற்றது. பாதிக்கப்பட்ட நபர்கள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.

இதுக்குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்கணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு பகுதியை சேர்ந்த இசக்கி பாண்டி (24)  என்பவரை பூதப்பாண்டி காவல் நிலைய ஆய்வாளர் முத்துராஜ் அவர்கள் கைது செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் இவர் பல்வேறு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. 

மேலும் அவரிடமிருந்து நான்கு இருசக்கர  வாகனங்கள் மீட்கப்பட்டது. காவல் ஆய்வாளர் அவர்கள் குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜற்படுத்தி சிறையில் அடைத்தார். குற்றவாளியை  கண்டுபிடித்த போலிசாரை மாவட்ட காவல் கண்கணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

No comments:

Post a Comment