கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக தந்தை பெரியாருடைய 49-ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி இன்று காலை 10 மணிக்கு நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர்கழக மாவட்ட தலைவர் சுப்பிரமணியம்,தலைமையில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

திக மாவட்ட செயலாளர் வெற்றி வேந்தன், முன்னிலை வகித்தார். திக மாவட்ட அமைப்பாளர் பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் நல்ல பெருமாள், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் சிவதாணு, இலக்கிய அணி செயலாளர் பொன்னுராசன் தொழிலாளர் அணி செயலாளர் கருணாநிதி, இளைஞரணி மாவட்ட தலைவர் இராஜேஷ், கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் யுவான்ஸ், கழகத் தோழர்கள் கோபாலகிருஷ்னன், பாலகிருஷ்னன், தமிழ் அரசன், செல்வராஜ், தமிழ்மதி, பொன் பாண்டியன் மணிமேகலை திமுக தொழிற்சங்க அமைப்பாளர் இளங்கோ, திராவிட நட்புக்கழக பொறுப்பாளர்கள் தனிஸ்லாஸ், ஆனந்த், விஷ்னு மற்றும் கழகத் தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment