காலை 7.00 மணிக்கு பக்திஇசை, காலை 9.00மணிக்கு நாதஸ்வர மேளம், காலை 10.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உலக நன்மைக்காக அம்மனை வேண்டி பரசேரி சியாமளா விஸ்வேஸ்வரன் அவர்கள் தலைமையில் ஶ்ரீலலிதா சகஸ்ரநாம பூஜை நடைபெறும், மதியம் 1.00 மணிக்கு அலங்கார தீபாராதனை, மதியம் 1.30 மணிக்கு அன்னதானம், அதனை தொடர்ந்து பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற இருக்கின்றன.

பௌர்ணமி பூஜையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து காளிகேசத்திற்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட இருக்கிறது. நிகழ்ச்சிகான ஏற்ப்பாடுகளை காளிகேசம் அருள்மிகு ஶ்ரீகாளிஅம்மன் திருக்கோவில் சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பௌர்ணமி பூஜை வழிபாட்டு குழு நிர்வாகிகளுடன் பக்தர்களும் செய்து வருகின்றனர்.


No comments:
Post a Comment