அந்த குழந்தை முளகுமூட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறது. குழந்தையை தினசரி கோழிப்போர்விளையை சேர்ந்த சுஜின் (35) என்பவர் பிற குழந்தைகளுடன் இந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தையும் அழைத்துச் செல்வது வழக்கம்,

சம்பவத்தன்று அந்த குழந்தையை தனது மடியில் அமர வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் வலியால் துடித்த குழந்தை அழுதுள்ளது. உடனே அருகாமையில் உள்ள கடையில் நிறுத்தி மிட்டாய் வாங்கி கொடுத்துள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தை வீட்டில் சென்று கூறினால் உனது அம்மாவை கொன்று விடுவேன் என மிரட்டி உள்ளார். பயந்து போன குழந்தை வீட்டில் சென்று அழுது கொண்டே இருந்துள்ளது. அப்போது குழந்தையின் தாயார் என்ன விஷயம் என கேட்டுள்ளார். குழந்தை அழுது கொண்டே விஷயங்களை கூறியுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர். மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதை அடுத்து சுஜின் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், சுஜினை தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment