இன்று ஒரு மாற்றுத்திறனாளி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு வந்த போது அவருக்கு சிறுநீர் கழிக்க வரவே உடனடியாக நடக்க முடியாத அந்த மாற்றுத் திறனாளி ஒரு காலில் தாவி தாவி பாதையே இல்லாத கழிப்பறைக்கு சென்ற காட்சி காண்போரை கண் கலங்கச் செய்தது.
மாற்றுத்திறனாளிகள் இந்த கழிப்பறைக்குச் செல்ல வேண்டிய பாதையில் வாகனங்களைக் கொண்டு நிறுத்தி பாதையை அடைத்து வைத்தது மாத்திரமில்லாமல் அப்பாதையின் அருகே கருங்கல் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. சாதாரண மனிதனால் கூட செல்ல முடியாத அளவுக்கு இந்தக் கழிப்பறையின் பாதைகள் வாகனங்களாலும் கற்களாலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல மாற்றுத்திறனாளிகள் செல்வதற்காக போடப்பட்டுள்ள சாய்வு தளத்தில் கைப்பிடி கம்பி உடைந்தும் அப்பாதை முழுவதும் புதர் மண்டி காடுகளாக காணப்படுகிறது. அதுபோல இந்தக் கழிவறையில் சரியான தண்ணீர் வசதி இல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே மாற்றுத்திறனாளிகளுக்கு இப்படிப்பட்ட பரிதாப நிலை என்றால் மாவட்டத்தில் உள்ள மற்ற இடங்களில் கூறவா வேண்டும். மாவட்ட ஆட்சியர் கண்டு கொள்வாரா இல்லை இந்த பரிதாப நிலை தொடருமா? சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு.
No comments:
Post a Comment