தினம் ஒரு வார்டு கள ஆய்வு மாநகராட்சி மேயர் அதிரடி. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 2 December 2022

தினம் ஒரு வார்டு கள ஆய்வு மாநகராட்சி மேயர் அதிரடி.


தினம் ஒரு வார்டு கள ஆய்வு என்ற வகையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒவ்வொரு வார்டுகளிலும் காலை 7 மணி முதல் 9 மணி வரை இருசக்கர வாகனம் மற்றும் நடந்தும் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ். 

அதன் அடிப்படையில் இதுவரை 37 வார்டுகளில் ஆய்வு செய்யப்பட்டு  இன்று (03.12.2022) 38-வது ஆய்வாக 19-வது வார்டுக்கு உட்பட்ட ஆசாரிப்பள்ளம், சவளக்காரன்கோணம், கீழ ஆசாரிபள்ளம், மேல ஆசாரிபள்ளம், நடு ஆசாரிபள்ளம் ஆகிய பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டார். 


ஆய்வின் போது துணை மேயர் பிரின்ஸி லதா மாநகராட்சி அதிகாரிகள்  மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட கழக நிர்வாகிகள்  உடனிருந்தனர். 

No comments:

Post a Comment