தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு கிளையின் சார்பாக ஈகைத்திருநாள் திடல் தொழுகை இன்று (22/04/2023) திருவிதாங்கோடு ஆக்ஸ்போர்டு பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற்றது, இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும், குழந்தைகளும் முதியவர்களும் கலந்து கொண்டு தங்களின் பெருநாள் தொழுகையை நபிவழியில் நிறைவேற்றினர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கன்னியாகுமரி மாவட்டத்தின் சார்பாக சுமார் 18 இடங்களில் இன்று பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.

தொழுகை முடிந்த பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட துணைச் செயலாளர் சகோ. நூருல் அமீன் அவர்கள் ரமளான் மாதம் முழுவதும் நோன்பிருந்து இன்றைய தினம் ஈதுல் ஃபித்ரு எனப்படும் ஈகைத்திருநாளை கொண்டாடி வருகிறோம், ஏழைகளும் பசியின்றி இப்பண்டிகையை சந்தோசத்தோடு கொண்டாட வேண்டி தொழுகைக்கு முன்னரே பெருநாளுக்கான தர்மமாகிய பித்ராவை நிறைவேற்றி உள்ளோம், இறைவனிடம் அனைவரின் நலத்திற்கும் வளமான, அமைதியான வாழ்க்கைக்காகவும் பிரார்த்திதோம், இன்றைய தினத்தை குடும்பத்தினர், நண்பர்களோடு மகிழ்ச்சியாக கொண்டாட இறைவனை பிரார்த்திக்கிறோம் என்று கூறினார்.
பெருந்திரளாக கூடிய மக்கள் ஒரு மாதம் நோன்பிருந்து இன்றைய தினத்தில் இந்த பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடினர் ஒருவருக்கொருவர் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
No comments:
Post a Comment