
அதன் தொடர் நடவடிக்கையாக தற்போது சுமார் 56,00,000/- (ஜம்பத்தாறு இலட்சம் ரூபாய்) மதிப்புள்ள 405 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேற்படி கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை திருநெல்வேலி சரக காவல் துணை தலைவர் பிரவேஷ்குமார் உரிய நபர்களிடம் ஒப்படைத்தார். இந்த செல்போன்களை கண்டுபிடிக்க காரணமான சைபர் பிரிவு போலீசாரை திருநெல்வேலி சரக காவல் துணை தலைவர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். மேலும் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தெரியாத நபரிடமிருந்து செல்போன் வாங்குவதை தவிர்க்க வேண்டும் அது குற்றசம்பவத்தில் சம்மந்தப்பட்ட செல்போனாக செல்போனாக இருக்கலாம் மேலும் பொதுமக்கள் செல்போன்களை தவறவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனடியாக மனு அளிக்கவேண்டும் இல்லையெனில் காவல் துறை இணையதளத்திலும் தங்களது புகாரை பதிவு செய்யலாம்.
No comments:
Post a Comment