கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட 45 செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு. போலீஸ் டி.ஐ.ஜீ பிரவேஷ்குமார் வழங்கினார். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 27 April 2023

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட 45 செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு. போலீஸ் டி.ஐ.ஜீ பிரவேஷ்குமார் வழங்கினார்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு புகார்மனுக்கள் பெறப்பட்டது. அந்த புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N.ஹரி கிரன் பிரசாத்   உத்தரவின்படி அவருடைய நேரடி மேற்பார்வையில் இயங்கும் சைபர் பிரிவு போலீசார் காணாமல் போன செல்போன்களை மீட்கும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

அதன் தொடர் நடவடிக்கையாக தற்போது சுமார் 56,00,000/- (ஜம்பத்தாறு இலட்சம் ரூபாய்) மதிப்புள்ள 405 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேற்படி கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை திருநெல்வேலி சரக காவல் துணை தலைவர்  பிரவேஷ்குமார் உரிய நபர்களிடம்  ஒப்படைத்தார். இந்த செல்போன்களை கண்டுபிடிக்க காரணமான சைபர் பிரிவு போலீசாரை திருநெல்வேலி சரக காவல் துணை தலைவர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். மேலும் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


பொதுமக்கள் தெரியாத நபரிடமிருந்து செல்போன் வாங்குவதை தவிர்க்க வேண்டும் அது குற்றசம்பவத்தில் சம்மந்தப்பட்ட செல்போனாக செல்போனாக இருக்கலாம் மேலும் பொதுமக்கள் செல்போன்களை தவறவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனடியாக மனு அளிக்கவேண்டும் இல்லையெனில் காவல் துறை இணையதளத்திலும் தங்களது புகாரை பதிவு செய்யலாம்.

No comments:

Post a Comment