மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் இரு சமுதாயத்தினர் இடையேயான கலவரத்தை மத்திய அரசு தடுக்க தவறிவிட்டது என்பதற்கு கண்டனம் தெரிவித்தோம், அங்கு பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி குமரி மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில் இன்று நாகர்கோவிலில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள்எம்பி ஹெலன் டேவிட்சன் தலைமை தாங்கினார் ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் கலந்து கொண்டு பேசினார், மாநகரச் செயலாளர் ஆனந்த் துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, மாநகரமகளிர் அமைப்பாளர் அம்மு ஆன்றோ, உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் சிலர் தங்களது கண்களை கருப்பு துணியால் மூடி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
No comments:
Post a Comment