கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரர் ஆலய திருகல்யாணம் உற்சவம் மற்றும் மாபெரும் அன்னதானம் P.T.செல்வகுமார் துவக்கி வைத்தார். கன்னியாகுமரி அடுத்த வடுக்கன்பட்டு, அகஸ்தீஸ்வரர் ஆலய திருகல்யாணம் உற்சவம் நடைபெற்றது. குமரி மாவட்ட இனைக்கப்பட்ட - இனைக்கப்படாத திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் P.T.செல்வகுமார்* கலந்து கொண்டு மாபெரும் அன்னதானத்தை துவக்கி வைத்தார். கோவில் நிர்வாகிகள் சிறந்த வரவேற்பு அளித்து வரவேற்றனர். நிகழ்வில், காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் வக்கீல் ஸ்ரீனிவாசன், கலப்பை மக்கள் இயக்க மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், கோவில் மேலாளர் ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment