நாகர்கோவில் மாநகராட்சி மீனாட்சி கார்டனில் கனமழையால் தண்ணீர் சூழ்ந்த இடத்தில் தற்போது தண்ணீர் வடிந்த நிலையில் அங்கு மாநகராட்சி பொறியாளர் அவர்களுடன் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்பகுதியின் மழைநீர் வெளியேறும் மடைகளை இரயில்வே துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் இரட்டை இரயில் பாதை திட்ட பணியின் போது அடைக்கப்பட்டதால் மழைநீர் உடனடியாக வடியவில்லை. எனவே நிரந்தர தீர்வுக்கான திட்டவரைவுகளை உருவாக்கி தேவையான நடவடிக்கை மேற்கொள்ள மாநகராட்சி பொறியாளர் அவர்களோடு ஆலோசனை மேற்கொண்டார்.
No comments:
Post a Comment