மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் மனுக்கள் விசாரணை. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 20 December 2023

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் மனுக்கள் விசாரணை.


கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சுந்தரவதனம் IPS அவர்கள் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் இன்று 20-12-2023 மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டு அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள்.

இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்பையா, குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.கம்பம் சாமுவேல் பிரவீன் கௌதம் இ.கா.ப,  கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஷ் குமார்,  தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.உதய சூரியன்,  நாகர்கோவில் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.நவீன் குமார் மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உடனிருந்தனர். 

No comments:

Post a Comment