கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அவர்கள் உத்தரவின்படி குளச்சல் உதவி காவல் கண்காணிப்பாளர் பிரவின் கவுதம் மேற்பார்வையில் குளச்சல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் காவல் துறையினர் தோட்டியோடு பகுதியில் வாகன சோதனை செய்தனர்.
அப்போது காலி கனிமவள லாரிகள் காலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணிவரை மாவட்டத்திற்குள் இயங்க தடை என்ற உத்தரவை மீறி லாரி ஒன்று வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்த போது, லாரி ஓட்டுநர் ஆகாஷ் உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், லாரியில் நம்பர் பிளேட் பொருத்தாமலும், குடிபோதையிலும் இயக்கியது தெரிய வந்தது.
பின்னர், லாரி ஓட்டுநரை பிரீத் அனலைசர் கருவியில் சோதனை செய்து, குடிபோதை உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்து, லாரி பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மேற்படி ஓட்டுநருக்கு நீதிமன்றம் மூலமாக ரூ.18500 அளவுக்கு அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment