இந்தியாவின் தென்கோடியாம் கன்னியாகுமரியில் காவல் நிலையம் அருகில் இருந்து திருவேணி சங்கம் செல்லும் பாதையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது, இந்த நடைபாதையை அதனருகில் கடைவைத்துள்ளவர் ஆக்கிரமித்து சுற்றுலா பயணிகள் நடந்து செல்வதற்கு இடையூறாக தனது பொருட்களை வைத்துள்ளனர் இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பலமுறை புகார் அளித்தும் பேரூராட்சி நிர்வாகமும் கோயில் நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் கடைக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர், இதனால் இப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளும் சமூக ஆர்வலர்களும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதனை உடனடியாக கருத்தில் கொண்டு நடைபாதையை மீட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment