கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட கட்டிடத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் மாண்புமிகு பால்வள துறை அமைச்சர் திரு. த.மனோ தங்க ராஜ், மாநகராட்சி மேயர் திரு.ரெ. மகேஷ், ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் அவர்கள் நிகழ்ச்சியின்னை தலைமை தாங்கினார்.
உடன் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை முதல்வர் பிரின்ஸ், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, மாகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லாதா மற்றும் மாமன்ற உறுப்பிர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், மாநகராட்சி அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய கட்டிடத்திற்க்கான அடிக்கல் நாட்டுதல். மற்றும் மாவட்டத்தில் பல இடங்களில் முடிவுற்ற கட்டிடங்களை பொதுமக்கள் பயன் பெறும் வகையில் கானொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment