கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தின் நிறைவு நாளான இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் யாங்சன் டோமா பூட்டியா மற்றும் நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் செல்லச்சாமி மற்றும் சுமித் ஆல்வின். காவலர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவதின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அது தொடர்பான துண்டு பிரசுரத்தை வழங்கினர். மேலும் வாகன ஓட்டி ஆகிய நான் எனது வாழ்நாள் முழுவதும் சாலை விதிகளை மதித்தும் எனக்கோ என்னால் பிறருக்கோ விபத்து ஏற்படா வண்ணம் வாகனம் ஓட்டுவேன் என்றும் இனி வரும் சந்ததிகளுக்கு முன் உதாரணமாக செயல்படுவேன் என்றும் உறுதிமொழி ஏற்கிறேன்" என்ற சாலை பாதுகாப்பு உறுதிமொழி மேற்கொண்டனர்.
No comments:
Post a Comment