அஞ்சுகிராம் அடுத்து மாடம்பிள்ளைதர்மம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆண்டுவிழா தலைமை ஆசிரியர் பலவேசமுத்து தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினர் கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் பி.டி.செல்வகுமார் அவர்கள் அதிகமதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம் வழங்கி விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் குமரி மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் முத்துக்குமார், துவக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் சுடர்மணி, முன்னாள் ஆசிரியர் சிவமாயாண்டி, வார்டு உறுப்பினர் துரையரசு, ஆசிரிய ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள், மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment