காவல்துறை தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில தலைவர் வை.தினகரன் மற்றும் முன்னணி நிர்வாகிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தால் போராட்டத்தை தடுத்து விடலாம் என எண்ணினர் ஆனால் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் திட்டமிட்டபடி எழுச்சியோடு போராட்டத்தை முன்னெடுத்து 150க்கும் மேற்பட்டவர்கள் இறச்சகுளம் பகுதியில் திரண்டு தடையை மீறி சாகும் வரை உண்ணாவிராத போராட்டத்தை தொடர்ந்தனர்.
அப்போது காவல்துறை அவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்து மீண்டும் மாலையில் விடுதலை செய்துள்ளனர். தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில தலைவர் வை.தினகரன் கூறுகின்ற போது ஜனநாயக வழியில் அறவழியில் அமைதிப் போராட்டமாக போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய அண்ணல் அம்பேத்கருக்கு முழு உருவ சிலை வைக்க கோரி கடந்த 10 வருடத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறோம் ஆனால் அரசும் காவல் துறையும் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் அண்ணல் அம்பேத்கர் சிலை வைக்க அனுமதி வழங்காமல் புறக்கணித்து வருகிறது அதற்காக போராட்டம் நடத்த முற்பட்டவர்களை அரச பயங்கரவாதத்தை ஏவி விட்டு காவல் துறை மூலம் போராட்டத்தை சீர்குலைக்க திட்டமிட்டு அதிகாலையில் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் முக்கிய தலைவர்களை காவல்துறை அதிகாரிகள் கைது செய்து தக்கலை காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டனர்.
அரச பயங்கரவாதத்தாலும் காவல்துறை அடக்குமுறைகளாலும் ஜனநாயக வழியில் போராட்டம் நடத்துபவர்களை தடுக்க முடியாது அண்ணல் அம்பேத்கர் முழு உருவ சிலை அமைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் வருகின்ற திங்கள்கிழமை 26-02-2024 அன்று அண்ணல் அம்பேத்கர் முழு உருவ சிலை வைக்க அனுமதி கோரி இறச்சகுளம் பகுதியில் மீண்டும் கருப்புக்கொடி ஏந்தி கிராமம் முழுவதும் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில தலைவர் வை.தினகரன் அவர்கள் அறிவித்துள்ளார். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment