மயிலாடி சேகரம் அமராவதிவிளை திருச்சபை கிறிஸ்துவ பக்தி முயற்சி சங்கம் சார்பில் றாலி பெருவிழா மற்றும் பரிசளிப்பு விழா அமராவதி விளை சி.எஸ்.ஐ.சர்ச் மைதானத்தில் நடைபெற்றது, இந்நிகழ்விற்கு மயிலாடி சேகரம் ஆயர் கிறிஸ்து தாஸ் தலைமை தாங்கினார்.
அமராவதிவிளை பங்கு தந்தை ஜோசப் ராஜ் வரவேற்று பேசினர், இவ்விழாவில் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் நடனமாடியவர்களுக்கும் சேகரத்துக்கு உட்பட்ட குமாரபுரம் தோப்பூர் குருக்கள் மடம் ஆண்டார்குளம் வேதமாணிக்கபுரம் அமராவதி விளை சிதம்பரபுரம் உள்ளிட்ட 15 சி.எஸ்.ஐ சபை போதகர்களுக்கு சிறப்பு விருந்தினர் கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் பி.டி.செல்வகுமார் பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மயிலாடி ரிங்கல்தௌபே பள்ளியின் தாளாளர் ஆல்வின் நாயகம் மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன் பிரவீன் புஷ்பராஜ் அனிதா மற்றும் ஊர் பொதுமக்கள் சபை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment