நாகர்கோவில் உட்கோட்ட காவல்நிலையங்களில் சமீப காலமாக வீடுகளில் பூட்டை உடைத்து தொடர் திருட்டு - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 16 May 2024

நாகர்கோவில் உட்கோட்ட காவல்நிலையங்களில் சமீப காலமாக வீடுகளில் பூட்டை உடைத்து தொடர் திருட்டு

 


நாகர்கோவில் உட்கோட்ட காவல்நிலையங்களில் சமீப காலமாக வீடுகளில் பூட்டை உடைத்து தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சுந்தரவதனம் I.P.S. அவர்கள் உத்தரவுப்படி  நாகர்கோவில் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் செல்வி யாங்சன் டோமா பூட்டியா I.P.S.  அவர்கள் மேற்பார்வையில் கோட்டார் காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு பாலமுருகன் தலைமையில்  தனிப்படை உதவி ஆய்வாளர் திரு மகேஷ்வரராஜ், தலைமை காவலர் திரு ராஜ்குமார், திரு சிவராம் மற்றும் முதல்நிலை காவலர்கள் திரு விஜி, திரு சாம்எடிசன், திரு இல்பர்ட்ஜெய்சன், திரு ஜெபின்தாஸ் என தனிப்படை அமைக்கப்பட்டு ஒழுகுனசேரி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கும்  போது சந்தேகப்படும் வகையில் இரும்பு கம்பி மற்றும் கதவு உடைக்கும் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்த தவசிபால்(எ) ஏசேக்கியேல் வயது-37 என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் இவர் கோட்டார், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி  மற்றும் சுசீந்திரம் ஆகிய காவல்நிலையங்களில் 9 இடங்களில் வீடுகளில் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடியது தெரிய வந்தது. மேலும் கிடுக்குபிடி விசாரணையில் இவர் கொடுத்த தகவலின் பேரில் இந்த திருட்டு சம்பவங்களில் சம்மந்தப்பட்ட செண்பகராஜ் வயது-35 மற்றும் அவரது மனைவி திருப்பதி வயது-31 ஆகியோர்களை திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி சென்று கைது செய்து திருடு போன *சுமார் 12½  லட்சம் மதிப்புள்ள 305 கிராம் தங்க நகைகள் மற்றும் சுமார் 1¼   லட்சம் மதிப்புள்ள 1½ கிலோ வெள்ளி பொருட்கள் மொத்தம் (14.00,000) மதிப்புள்ள பொருள் மீட்கப்பட்டுள்ளது. தொடர் திருட்டு வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து வழக்கு சொத்துகளை மீட்ட கோட்டார் காவல் ஆய்வாளர் திரு பாலமுருகன் மற்றும் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு மகேஷ்வரராஜ், மற்றும் காவல் ஆளிநர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சுந்தரவதனம் I.P.S.அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

No comments:

Post a Comment