இந்தியாவிலேயே நாகர்கோவிலில் தான் ஆட்டோ கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 16 May 2024

இந்தியாவிலேயே நாகர்கோவிலில் தான் ஆட்டோ கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது.

 


இந்தியாவிலேயே நாகர்கோவிலில் தான் ஆட்டோ கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது.


அதிலும் வடசேரி பேருந்து நிலையத்தை சுற்றி உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் 2.2 கிலோமீட்டர் தூரமுள்ள ரயில் நிலையத்திற்கு 150 ரூபாய் கேட்பார்கள், ஏன் இவ்வளவு கட்டணம் என்று கேட்டால் இரண்டு மூன்று ஆட்டோ ஓட்டுனர்கள் ஒன்று சேர்ந்து பயணிகனை கேலி கிண்டல் செய்வதும் இரவு நேரம் என்றால் மிரட்டல் தோனியில் தான் பதில் வரும்.


அதுபோல, கேட்கிற அதிக கொள்ளை கட்டணம், தெரிந்த ஆட்டோ ஓட்டுனருக்காவது போகட்டும் என்று எண்ணினால், வரிசையில் உள்ள ஆட்டோவில் தான் தான் ஏறவேண்டும் என சட்டம் பேசுவார்கள். ஆனால் அவர்கள் நடைபாதையில் ஆட்டோ நிறுத்த கூடாது என்ற சட்டத்தை மதிக்க மாட்டார்கள்.


முதலில் குறிப்பிட்ட சங்கங்களின் ஆட்டோக்கள் தான் குறிப்பிட்ட இடங்களில் நிறுத்த வேண்டும் என்ற அராஜகத்தை ஓழித்து, எந்ந ஆட்டோவும் எந்த இடத்திலும் சவாரி எடுக்கலாம் என்ற நிலை வந்தாலே கட்டண கொள்ளையும் பயணிகளை மிரட்டுவதும் முடிவுக்கு வரும்.

No comments:

Post a Comment