போதையில் தந்தை தகராறு வீட்டிலிருந்து வெளியேறிய பள்ளி மாணவி!!! - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 May 2024

போதையில் தந்தை தகராறு வீட்டிலிருந்து வெளியேறிய பள்ளி மாணவி!!!

 


போதையில் தந்தை தகராறு வீட்டிலிருந்து வெளியேறிய பள்ளி மாணவி!!!


கருங்கல் அருகே எட்டணி சிறுகாட்டு விளையை சேர்ந்தவர் சுரேஷ் மகள் அனிலியா (16). இவர் நட்டாலும் அரசு மேல்நிலை பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.


சம்பவ தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற அனிலியா பின்னர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.


இது குறித்து தாயார் ரூபி, கருங்கல் போலீசில் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், - சுரேஷ் மது போதையில் வீட்டில் வந்து தகராறு செய்வதால் தொந்தரவு தாங்க முடியாமல், மகள் வீட்டை விட்டு சென்றதாக கூறியுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்கள்.


ஏற்கனவே கடந்த ஆண்டு இதே போன்று அனிலியா வீட்டில் இருந்து மாயமானார். அப்போது அவரை போலீசார் மீட்டபோது, தந்தை மற்றும் சகோதரர் மது போதையில் அடிக்கடி வீட்டில் தகராறு செய்வதால் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறியுள்ளார்.

No comments:

Post a Comment