நாகர்கோவில், தேர்தல் தோல்வி பயம் காரணமாக கன்னியாகுமரிக்கு தியானம் செய்ய பிரதமர் மோடி வருவதாக *தமிழ்நாடு ராகுல்காந்தி பேரவை மாநில தலைவர் நாஞ்சில் ரஜினிசெல்வம்* கூறியதாவது.
நிரந்தரமாக 'தியானம்' செய்யுங்கள் தேசம் பிழைக்கும்!
பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு தியானம் செய்ய வருவதை 'மறைமுக தேர்தல் பிரச்சாரமாக கருத வேண்டாம்' என்கின்றனர் சிலர். அதே கன்னியாகுமரியை உள்ளடக்கிய தமிழ்நாடு கனமழை, பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது மக்களைச் சந்தித்து ஆறுதல் கூற வராத அவர், நிதிப் பங்கீடு, சிறப்புத் திட்டங்கள் ஒதுக்கீடு, மாநில உரிமை பறிப்பு என தமிழ்நாட்டை வஞ்சிக்கும் அவர், தேர்தலுக்காக இங்கு ஓயாமல் வருவதுவும்,
இந்து மதத்தை, ராமர் கோயிலை, விவேகானந்தர் மண்டபத்தை பயன்படுத்துவதும்
‘அரசியலுக்காக' அல்லாமல் வேறென்ன?
ஜூன் 4க்குப் பிறகு மோடி,அமித்ஷா அங்கே நிரந்தரமாக தியானம் இருக்கலாம். தேசம் உங்கள் மதவெறி ஆட்சிக்கு முடிவுரை எழுதிக்கொண்டிருக்கிறது என்று கூறினார்.
No comments:
Post a Comment