கோடைக்கால சிறார் பன்முக கலைப் பயிற்சி நிறைவு விழா சுவாமி பத்மேந்திரா பங்கேற்பு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 1 June 2024

கோடைக்கால சிறார் பன்முக கலைப் பயிற்சி நிறைவு விழா சுவாமி பத்மேந்திரா பங்கேற்பு.


 கோடைக்கால சிறார் பன்முக கலைப் பயிற்சி நிறைவு விழா சுவாமி பத்மேந்திரா பங்கேற்பு.



நாகர்கோவில்,பார்வதிபும் அபிநயா நாட்டியப்பள்ளியில் கடந்த ஒரு மாதமாக பள்ளி மாணவ, மாணவியருக்கான ஸ்போக்கன் இங்கிலீஷ், கையெழுத்து பயிற்சி, ஓவியம் மற்றும் நடனப் பயிற்சிகளுக்கான கோடைக்காலப் பயிற்சி சிறப்பு வகுப்புகள் நடைபெற்றன. இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிப்பு விழா 01/06/2024 சனிக்கிழமை நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் அபிநயா நாட்டிய பள்ளியின் தலைவர் எஸ்.கண்ணன் தலைமை தாங்கினார், நாகர்கோவில் அகரா ஃ பவுண்டேஷன்ஸ் இயக்குனர் தங்கம் சுந்தர் பாபு முன்னிலை வைத்தார். மாநில வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்கள், ஓவிய ஆசிரியர் எஸ். சிவசுப்பிரமணியம் வாழ்த்துரை வழங்கினார்.



விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஓவிய கண்காட்சியும் இடம் பெற்றிருந்தன. விழா நிறைவில் அபிநயா நாட்டியப் பள்ளியின் குரு கே.எல்.அபிநயா நன்றியுரை வழங்கினார்.

No comments:

Post a Comment