கன்னியாகுமரி சுற்றுலா படகு சேவை இயக்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க தமிழ்நாடு அரசு சுற்றுலா துறையும், மாவட்ட நிர்வாகமும் பல முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் வருகையை திட்டமிட்டு தடுக்கும் விதமாக ஒரு சிலர் பணி செய்து வருகின்றனர், சில நாட்கள் முன்பு வெளிநாட்டில் எடுக்கப்பட்ட, பாம்புகள் பாறை மீது கூட்டமாக இருப்பது போன்ற வீடியோக்களை கன்னியாகுமரி கடற்கரை என பதிவிட்டார்கள். அதே போன்று கடல் சீற்றம், கடல் உள்வாங்கியது, சுற்றுலா படகு சேவை ரத்து என கூறி சுற்றுலா பயணிகள் குமரி வருவதை தடுக்கும் விதமாக ஒரு சிலர் செயல்படுவதாகவும், இது மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறையினரையும், வியாபாரிகளையும் பாதிப்பதாகவும் கூறப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் வருகையை தடுக்கும் நோக்கில் செயல்படும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.
No comments:
Post a Comment