மழையால் வீடு இடிந்து இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி பாக்கியலெட்சுமி மற்றும் இடிந்த வீட்டை பாஜக மாவட்ட பொருளாளரும் மாநகராட்சி தெற்கு மண்டல தலைவரும் 51 வார்டு மாமன்ற உறுப்பினர் டாக்டர். முத்துராமன் பார்வையிட்டு இடிந்த வீட்டை சீர்செய்து கொடுக்கப்படும் என்றும் மூதாட்டிக்கு உரிய நல உதவி கிடைக்க வழிவகை செய்யப்படும் எனவும் மூதாட்டிக்கு பண உதவியும் செய்து கொடுத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள மேல புல்லு விளை பகுதியில் மழையால் ஒரு வீடு இடிந்தது,இதில் வீட்டில் இருந்த 72வயது மூதாட்டி பாக்கியலெட்சுமி உள்ளே சிக்கி இருப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதனை தொடர்ந்து,இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டியை பத்திரமாக உயிருடன் மீட்டுனர்.தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த பாஜக மாவட்ட பொருளாளரும் மாநகராட்சி தெற்கு மண்டல தலைவரும் 51 வார்டு மாமன்ற உறுப்பினருமான டாக்டர். முத்துராமன் அவர்கள் சேதமடைந்த வீட்டை பார்வையிட்டார் மேலும் பாதிக்கபட்ட மூதாட்டியிடம் நலம் விசாரித்து வீட்டை சீர்செய்து கொடுக்கப்படும் என்றும் மூதாட்டிக்கு உரிய நல உதவி கிடைக்க வழிவகை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்
No comments:
Post a Comment