கன்னியாகுமரி_ களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி திராவிடர்கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தலைமைப் பொறியாளருக்கு கடிதம்.
குமரிமாவட்டத்தில் சமீபகாலமாக பெய்த பலத்த மழை காரணமாக கன்னியாகுமரி களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை மிகவும் பழுதடைந்துள்ளது, நாகர்கோவில், கோட்டார், பார்வதிபுரம், மார்த்தாண்டம் இன்னும் பல இடங்களில் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகின்றது. சாலையில் ஊர்திகள் பயணிக்க முடியாத நிலை உள்ளது.இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சூழ்நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் நலனைக் காக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் உடனடியாக விரைவாக இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென குமரிமாவட்ட திராவிடர்கழக செயலாளர் கோ. வெற்றிவேந்தன் கடிதம் அனுப்பியும், துறை சார்ந்த அலுவலர்களை தொலைபேசி மூலமாகவும் பேசி வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment