தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை:- - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 24 June 2024

தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை:-


 தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை:-


இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில்  இருந்து பிழைப்பு தேடி வருகை தந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வேலை செய்யும் வெளி மாநில தொழிலாளர்கள் அனைவரும் கட்டுமான தொழிலாளர் நல வாரிய இணைய தளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என தமிழக சட்ட சபையில்  அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்துள்ளது மிகவும் வரவேற்க்க தக்க செயலாகும் ஏனென்றால் தமிழகத்தில் தங்கி வேலை பார்க்கும் வெளி மாநில தொழிலாளர்கள் அவரவர்களுக்கு கிடைக்கும் வேலை  எந்த இடத்தில் கிடைக்கிறதோ அந்த இடம் தேடி சென்று மாறி மாறி  கிடைக்கும் வேலையை செய்வார்கள் இதனால் அவர்கள் எந்த ஒரு பகுதியிலும் நிறந்தரமாக தங்கி வேலை பார்க்க மாட்டார்கள் எனவே தான் வெளி மாநில தொழிலாளர்கள் எந்த பகுதியில் வேலை பார்க்கிறார்களோ அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பதிவு செய்யும் முறை உள்ளது.அதனுடன் தற்போது கட்டுமான தொழிலாளர் நல வாரிய இணைய தளத்திலும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என தமிழக சட்ட சபையில் அறிவித்த தமிழக அமைச்சர் சி.வி.கணேசன் அவர்களுக்கு தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் மனதார பாராட்டுக்களை தெரிவித்தார்.

No comments:

Post a Comment