நாகர்கோவிலில் உள்ள குமரிமாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் வைத்து இன்று மாவட்ட பஞ்சாயத்து சாதாரண கூட்டம் நடைபெற்றது, இதில் மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், திட்டக்குழு தலைவருமான. மெர்லியண்ட் தாஸ் தலைமை தாங்கினார்,
தமிழகத்தில் பெருகி வரும் கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் நடமாடத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், பாசன கால்வாய்களை தூர்வாரி விசாயத்திற்கு கொணடு வர வேண்டும். குமரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளை பேரூராட்சிகளின் இணைக்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும். ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் பொருட்கள் தங்குதடையின்றி அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்
No comments:
Post a Comment