ஆனை பாலம் அருகே கீழே விழுகின்ற நிலையில் நிற்க்கும் மரம் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்.
நாகர்கோவில் கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை இடலாக்குடியை அடுத்து ஆனைப்பாலம் (குளத்தூர்) பேருந்து நிறுத்துமிடத்தில் பல நாட்களாக வளர்ந்த (கிட்டத்தட்ட 100 அடி) மரம் பட்டு போய் இருக்கிறது அடிக்கடி மரக்கிளைகள் உடைந்து கீழே விழுகிறது,மரத்தின் கீழ் உயர் மின்னழுத்த ஒயர் செல்கிறது, மர கிளைகள் உடைந்து விழுந்து பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் மக்களுக்கும் மற்றும் சாலையில் வாகனங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிற வண்ணம் அந்த மரம் இருக்கிறது,ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து உயிர் சேதத்தை தடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்
No comments:
Post a Comment