மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அவர்கள் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் இன்று(10.07.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களின் மனுக்கள் மீது நேரடியாக விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள்.
இக்கூட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மதியழகன், குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர், அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என்.டி. சரவணன்
No comments:
Post a Comment