சீரழியும் கடையாலுமூடு பேரூராட்சி
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா திற்பரப்பு நீர்வீழ்ச்சியின் அருகில் கடையாலுமூடு பேரூராட்சி களியலில் இருந்து கடையாலுமூடு செல்லும் சாலை ஓரம் திடக்கழிவுகளை கொட்டி வைத்திருக்கும் பேரூராட்சி ஊழியர்கள். ஆதலால் நோய் பரவும் அபாயம் உள்ளது. திற்பரப்பு நீர்வீழ்ச்சிக்கும் பேச்சிப்பாறை அணை ஆகிய சுற்றுலா இடங்களை பார்க்க பயணிகள் அந்த வழியாகத்தான் செல்லுவார்கள். இதனால் பொது மக்களும் சுற்றுலா பயணிகளும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். இதை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
தமிழக குரல் இணையதளச் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனையில் இருந்து தமிழன்T.இராஜேஷ் குமார்.
No comments:
Post a Comment