எமனாக மாறும் மின்கம்பம்
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனை பேரூராட்சியில் நல்லூர் கோணம் செல்லும் சாலையில், சாலையின் நடுவே இரண்டு மின் கம்பங்கள் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அதன் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர். அதனால் வாகன ஓட்டிகள் அந்த சாலையில் செல்வதற்கே அஞ்சுகின்றனர். சம்மந்தப்பட்ட துறைகளுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதளச் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனையில் இருந்து தமிழன் T. இராஜேஷ் குமார்.
No comments:
Post a Comment